Sunday, March 18

மூன்றே வார்த்தை, மூச்சாய்யானதே !




முனி முனி முனியம்மா !
மூணு வார்த்தை சொல்லம்மா !!
முனி முனி முனியம்மா !
மூனே, மூணு வார்த்தை சொல்லம்மா !!

முதல் வார்த்தை முன்ம்மொழிவாய்,
மெய்ப்பொருளாய், உன் உருவாய். ( i )
இரெண்டாம் வார்த்தை இதயவளைவாய்,
காதல் சின்னமாய், கவியின் பந்தமாய். ( love )
மூன்றாம் வார்த்தை, நானே என்பாய் - பின்
நகைப்பாய், அழகாய் சொல்லி ம்முடிப்பாய். ( you )

முனி முனி முனியம்மா !
மூணு வார்த்தை சொல்லம்மா !!
முனி முனி முனியம்மா !
மூணு வார்த்தை சொல்லம்மா !!

ஏனோ! ஏனோ! வெட்கம் உன்க்கண்ணில்,
வாழ்வோச்சாவோ, நானென்றும் உன்னில் - உன்,
மூன்றே வார்த்தை, என் மூச்சாய் ஆனதே !
முழுமதியும், பிறைநிலவாய் தேயுதே !
நிலவை பிரிந்த வானமாய் என்னை,
தனிமையில் தவிக்க வைததுப்போதும்,
வந்துவிடு முனியம்மா, வாழ்வொன்றை தொடங்கிடுவோம்!!


முனி முனி முனியம்மா !
மூணு வார்த்தை சொல்லம்மா !!
முனி முனி முனியம்மா !
மூனே, மூணு வார்த்தை சொல்லம்மா !!




::::: இராம்குமார் கோபால் ::::::



No comments: