Wednesday, August 1

புது இரவு!


முட்டிய மடி நசுங்க,
கசிந்திடும் வெள்ளைத்திரவம்,
பசித்திருந்த உடலுக்கு,
பால்சோறு ஊட்டி,
பட்டினி இனியில்லை உனக்கு,
என்பதைப்போல் புது இரவில்,
தொடங்கி, விடிவதற்குள் கசங்கிய,
படுக்கையும், நசுங்கிய
மல்லிகையும், பாதி மீந்துப்
போன பால்சொம்பும், பூனை
உருட்டலில் குப்புற கவிழ்ந்து,
சொட்டு, சொட்டாய் சொட்டி,
தரையில் கிடந்த பாலை நா
வருடி பசியாறிய பூனையாய்,
விடிந்ததும், தூங்கிப்போனேன்,

சீம்பால் மருந்தாய்,
சிகிச்சையில் கிடந்த எனக்கு,
உயிர்கொடுத்து, உயிர் வாங்கிய
வாட்டியும், வதைத்தது, இனித்தது.

(வாட்டி = மனைவி)


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: