Saturday, August 4

பார்வதி!



மொத்தமாய் மூன்றேவ்வார்த்தை,
என்னுயிர் முடிவதற்குள் சொல்லிவிடு,

சத்தமாய், சாதகமாய், சவுக்கியமாய்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்,
வராமல் போனாலும், வார்த்தை
அந்த - மூன்றே வார்த்தை சொல்லிவிடு.

வானம், வற்றி வைகையில்
தண்ணீர் தேடி, அங்குமின்றி,
அலைக்கடல் ஓடி, ஆடிவரும்
அலைகள் தொட்டு, அதில் ஒரு
சொட்டு உன் காலில் பட்டு,
தெறிப்பதற்குக்குள்ளேனும்,
அந்த மூன்று வார்த்தை சொல்லிவிடு.

ஏதும் இல்லாத பிச்சை பாத்திரமாய்,
ஏழை கேட்கும், அட்சயப்பாத்திரமாய்,
பாலை நிலத்தின், பண்டைய சாத்திரமாய்,
பார்வதியே, பஞ்சமியில் - உன்னை
பெண்ப்பார்க்க வந்தவன் - நான்,
தானே கேட்கிறேன், இப்பொழுதாவது,
அந்த - மூன்று வார்த்தை சொல்லிவிடேன்.



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

* Photo courtesy: Google!
* கற்பனை புகைப்படமே.

No comments: