Saturday, August 4

எழுத நினைத்த எழுத்துக்கள்!



சணல் க்கயிற்றில்,
இழை, இழையாய்,
முறுக்கி, திருகி
இழுத்து க்கோர்த்த,
கோர்வையாய் சிலநேரம்,
சிந்தனையில் சிக்கி,
சிதைகிறேன்,

எழுதிட வரிகள் தேடிட,
வாய்வரை எட்டிப்பார்ததும்,
இதழோர எச்சில் பட்டு,
முழுதாய் முடிப்பதற்குள்,
மறைந்து, நமத்து போகிறதே,

மீள்வேனோ, மீண்டும்
மீளா தவிப்பேனோ,
முடிப்பேனோ, நினைத்திட்ட,
எழுத்துக்கள் எழுதி முடிப்பேனோ?

சொல்லடி கலைவாணி!
 
 
- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: