Saturday, August 25

வணக்கம், வாழவைக்கும் சென்னை!!


உன்னில் நானிருக்க
வந்தவன் இல்லை,
ஆனாலும் வாழ்கிறேன்,
பெருமை சேர்ந்திருக்கும்,
அருமை நிறைந்திருக்கும்,
உன்னில்
அடைக்கலம் கொண்டேன்,
பெட்டைக்கோழியின் இறைக்கையில்
உறங்கிடும் குஞ்சுகள் போலே,

நிதமும் உன்னை சுற்றி
தெருத்தெருவாய் வலம்
வந்தேன், என் தொழில்
விற்பனை என்பதால்,
உன் தலை முதல்
பாதம் வரை முற்றிலும்
அறிவேன் - நான்
போகாத இடமேதும்
இல்லை என்பதனால்,

படிப்படியான என்
வளர்ச்சியில் உன் பங்கும்
பெரும்பங்கோ,
உன்னாலே, உன்னுள்ளே
வாழ்கிறேனே, வளர்கிறேனே
சென்னையே நீயும் எனக்கு
இன்னொரு அன்னையோ!

இன்றுனக்கு பிறந்தநாளாம்!
வாழ்க நீ பல்லாண்டு பல
கோடி ஆண்டு,
வாழவைத்திடு வந்தோரையும்,
வரப்போவோரையும்!

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: