Saturday, August 4

மின்னல்!




கண்சிமிட்டி மறையும் பெண்ணோ, மின்னலும்!
லேசாய், லேசாய் மின்னிவிட்டு மறையுதடி.

வெட்கம் எதற்கு, அப்படி யாரைக்கண்டாய்,
என்னவள் சிரிப்பில் நீயும்,
காதல் கொண்டாயோ?
தூரமாய் இருந்துகொள்,
தூவானில் மறைந்துகொள்,
என்னவள், துயில்கின்ற நேரம் பார்த்து,
லேசாய் மின்னிக்கொள்,
என்னவள், கண்சிமிட்டும் நேரம் மட்டும்
ஓரமாய் ஒளிந்துக்கொள்.

 
 
- எழுத்தோலை கோ.இராம்குமார் -


No comments: