Wednesday, August 8

கலைவாணி !



அவள்,
என்னை நெருங்கும்
நொடிகள் எல்லாம்
எனக்குள் ஏதோ
நொறுங்கும் ஒலி
கேட்கிறது,
ஒளி ஊடுருவும்
கண்ணாடி போலவே,
அவளை ஊடுருவ
என் கண்கள் துடிக்கிறது,
காதுகள் வெறிக்கின்றது
அவள் கால் கொலுசு
சத்தம் கேட்க,
விரல்கள் தாளமிடுகிறது
காற்றில் தானே,
என்னையும் மறந்து
அவளுக்குள் நுழைந்த
உயிரும், உறங்கிட
அவள் மடிக்கேட்கின்றது,

கேட்பது எல்லாம்
கிடைத்திடுமாயின்,
கேட்டிட ஏதும்
இருந்திடுமோ உலகில்,
உலகமே அவளாய்,
இருப்பின், எனக்கு.

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: