Saturday, August 4

மழையற்ற ஒரு வருடமாய்!



பார்வையற்ற பாவையும் நீயோ,

என்னை பார்த்தும் பார்க்காதுப்போல்
போகிறாயே.

பார்வையற்ற பாவையும் நீயோ..(1)

வருடம் ஒரு வருடமாய்
மழையற்ற வயல்வெளியாய் வறட்சி
வஞ்சியுன், பார்வை செய்யும் புரட்சி
என்மேல் கல்லெறிந்து போனதடி.

குழிவிழுந்த நெஞ்சம் கேட்கும் - தஞ்சம்
உன் ஊமை விழிகளில் தானே - கொஞ்சம்,
இமைத்தாலே போதும், போதும் - மஞ்சம்
சாய்ந்த மணித்துளி, உயிர் உருகி ஓடுதடி,
காலம் திரிந்து காவியம் ஆகுமோ?
காதலும் கணித்து என் காதலாய் ஆகுமோ?
வருடம் ஒரு வருடமாய்,
மழையற்ற வயல்வெளியாய் வறட்சி...(2)

மழை ப்பிறந்து, மலரச்செய்யுமோ
மலர்களை, மக்கள் மனங்களை,
நீயுன் பார்வைக்கொண்டு, என்னை
மீண்டு பிறக்க செய்வாயோ மைதிலியே,
வருடம் ஒரு வருடமாய்,
மழையற்ற வயல்வெளியாய் வறட்சி,
வஞ்சியுன், பார்வை செய்யும் புரட்சி
என்மேல் கல்லெறிந்து போனதடி...

பார்வையற்ற பாவையும் நீயோ,
என்னை பார்த்தும் பார்க்காதுப்போல்
போகிறாயே.

வருடம் ஒரு வருடமாய்,
மழையற்ற வயல்வெளியாய் வறட்சி........



- எழுத்தோலை கோ.இராம்குமார் -


No comments: