Friday, August 3

வெற்றி!



 வலிகள் இல்லாத
வெற்றியும் இல்லை,
வெற்றிகள் காண்பதே
இவர்களின் எல்லை,
வேதனைகள், சோதனைகள்,
தடைகளை தாண்டி,
வேள்விகளில், கேள்விகளின்
பதிலோ அதுவும்,

உந்தித்தள்ள, உற்ச்சாகபடுத்த,
யார்க்கொடுப்பர் தோளை,
ஒருப்பதக்கம் பெற்றிடவே,
பெருமையதை சேர்த்திடவே,
காய்ச்சு, சிவந்த கைகள் நோக,
வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று,
ஓடி, ஒடிந்து, மடிந்து, களைத்து,
வெற்றிக்கனி பறிக்கா, இறங்கா
வெற்றி வீரர்கள் இவர்களை,
தோற்றாலும் தூற்றாமல்,
அடுத்த வரும்காலங்களில்,
தோற்காமல் ஜெயிப்பதற்கு,
உற்சாகம் படுத்துவோமா?

- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: