Saturday, August 25

கசியும் மௌனம்!



இமைக்குள் உருளும் விழிக்குள்,
கசியும் மௌனம் புரியாது,
கசிந்து ஒழுகும் நீரில், கண்ணீரில்
கலந்து மிதக்கும் உப்பும், – என்னிடத்தில்
தப்பாய் சேர்க்கிறது உன் மௌனத்தின்
அர்த்தங்களை,

மௌனமே மொழியாய் யானால்,
வார்த்தை தேவைகள் யாவர்க்கு வேண்டும்,
கண்ணிலே பேசிக்கொள்வோம்,
கைஜாடையில் கலந்துரையாடுவோம்,
ஊமையர், செவிக்கேளாதோர் போலவே,
நாமும் இருந்து விட்டு போவோமே,

வாயிருக்கும் நாயும் கூட
வள்ளென்று குரைத்து பேசிட,
வண்ணக்கிளி என்னடி ஆச்சுயுனக்கு
வாய்திறந்து பேசிடு ஒருமொழி,
வாடியே சாய்ந்திட்ட மல்லிக்கொடி
போலவே, வதங்கி நிற்கும் வார்த்தைகள்,
உனது வாய்த்திறந்து பேசிட வசந்தமாய் வீசுமே,

மௌனம் கசிந்துருகி
கண்களில் கண்ணீராய்,
புரியாதுப் போகவே,
அர்த்தங்கள் தேடியே
ஆயுள் வரை அலைவேனே,

பேசிடு ஒரு சொல்,
இனிதொரு தமிழ் மொழியில்,
வீசிடும் வசந்தத்தை ஒருமுறை
சுவாசித்து விட்டு சாகிறேன்.


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: