Saturday, August 4

சகிரா, சகிரா!!


மெல்லிடை மேலாடை,
என் விரலிடையில் விளையாட,
உறுவி, நழுவி, விலகி, வெளிச்சம்
பட்ட இருட்டறை வளைவாய் மடிப்பு,

மூடி வைத்தால் உயிரெடுக்கும்,
திறந்து விட்டால் மாரடைக்கும்,
கண்மூடி திறந்துப்பார்க்க கத, கதக்கும்,
கை வைத்து குளிர்க்காயும் விறகடுப்பும்,
மொத்தமாய் குத்தவைத்த குந்தவை இடுப்பும்,
சொந்தமாய் கொண்டவள் நீ குந்தாணி,

சோதனை செய்திட கேட்குதே என் மனமே,
முத்து, முத்தாய் முத்தம் வைத்து
மூச்சித்திணறி போவோமா,
மூழ்கிப்போன கப்பல் போலே,
ஆழம் சென்று படர்வோமா.
என் மெல்லிடை மேகலையே,
சொல்லடி இடையின இளவரசியே.



- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: