Wednesday, August 8

அ சோகவனம்!



அச்சு பிழையான எழுத்துகள்,
தலை எழுத்தாய் கிறுக்கியதாலோ,
`கதை உயர்த்திய ராவணன், அவன்
பத்து தலைகளும் ஒன்றாய்,
ராமன் அவன் அம்பில் மாண்டு,
சீதையவள் அன்பை பெறாமலே,
சிதைந்து போனதவன் சிதையும்
தீக்கு இரையாய், லங்கையின்
மணர் ப்பறந்த கடற்க்கரையோரம்..,

மாமன்னன் அரக்கர்க்குல அரசன்
பாசம், தன் தமக்கை மேல்மட்டுமே,
மைதிலியின் மேல் இல்லையே,
பிணையாய் பிடித்து வைத்தவளை,
கணையாழி காட்டி அடையாளம்
சொன்னதும் வானரம், ஆரவாரம்
கொண்டவளோ சீதையும், ஆசை
அவள் ராமன் மேல் மட்டுமோ,
இல்லை இலங்கையை தாண்டவோ?


- எழுத்தோலை கோ.இராம்குமார் -

No comments: