Tuesday, June 26

ஓமன பெண்ணே!

ஓமன பெண்ணே, ஒள்ளமர்க்கண்ணே,
ஓடிவா என்னுடன், ஒரு ஓட்டப்பந்தயம்
நடத்துவோம் -  பின்னே,
மூச்சு வாங்கும், அதனால் கொஞ்சம்,
உட்கார்ந்து பேசுவோம் - உலக கதை
ஊர்க்கதைக்கு ஊடே சிலுமிச பேச்சும்.

எந்தா மயக்கம், கழிச்சோடு வெள்ளம்,
தூர தெரியுதுப்பார் அங்கே வெளிச்சம்
அங்கேப்போய் வருவோம், எதற்கு அச்சம்,
ஆற உக்கார்ந்து, அளாவலாம் கொஞ்சம்,
அச்சன் கண்டால் அடிச்சே கொல்லுவானோ?
அம்மே வந்தாள், அரிவாள் மனையிலேயே வெட்டுவாளோ?
வந்தா பாத்துக்கலாம், வாடி என் பக்கம். 

::: கோ.இராம்குமார் :::

No comments: