Monday, June 25

கிறுக்கு!

புருவத்திலே அம்பெய்து,
புல்நுனியில் பனிக்கொய்து,
பூபோட்ட பாவாடை, பூப்பறித்து,
புதுவாசம் தந்தாயே, என்தேவி -
ஸ்ரீதேவி!

சாவித்துளை ஊடுருவி,
செவிதுளைக்குள் கச்சேரி,
சாயும்க்காலம் சந்தையிலே,
முழம், முழமாய் மல்லிகைப்பூ
சூடி, மந்தைவெளி போவோமா,
மாந்தளிர்ப்பெண்ணே, என் அன்னையின் -
மருமகளே!

மனசெல்லாம் நீயாய் போனால்,
மனசில்லை எனக்கு, மயக்கமாய் இருக்கு,
மான்விழி, மைவிழி சுந்தரி என் கண்மணியாய்,
காண ஒளி தந்து, கடந்துப்போகாதே இன்று,
காதலியே, என் தங்கைக்கு அண்ணியே!






::: கோ.இராம்குமார் :::




No comments: