Saturday, June 9

நேற்று, இன்று, நாளை ?


நேற்று:
கடைவீதியில் கண்ட அதே சிவப்பு தாவணி,
என்னை கடந்துப்போகையில்...
இன்றுதான் தொடங்கியதோ
தென்மேர்க்குப்பருவ காற்று - அதுவும்,
அவள் தேகம் பட்டு,
கிழக்காக என்மேல் வீச?
வழக்காட வாய்மையின்றி,
ஊமையானேனோ? - அப்படியோர்
பளிற்சிரிப்புடன் பவளமாய்,
பக்குவமாய், பம்பர விழி சுழற்றி,
ஒரு பார்வை! தெரியாமல் விழுந்ததோ
என்மேல் - தெரியவில்லை, இருந்தும்
திரும்பி ஒருமுறை பார்த்தாளே - எதுக்கு?
என்பது புரிந்து, அவளை காண முயல்கையில்,
நடுநிசி தெருவைப்போல், வெறுமையாய் மறைந்தாளே.

இன்று:
வாசல் என் வாசலில் நான்
நின்றுக்காக்கிறேன் - வழிம்மேல்,
விழிவைத்து வளம்வருகிறேன்,
தேவதை நீ வரும்த்தோரனை,
தெரியவில்லையே - இருந்தும்,
வாசல்ப்படி தேயும் அளவில்
நடந்துத்திரிகிறேன் - எதனால்,
இப்படியெல்லாம் என்று , எண்ணி
பார்க்கிறேன், எதுவும் விளங்காமல்
குழம்பி நிற்கிறேன்  - கடைவீதி
நெரிசலில் கண்ட தேவதை,
என் எதிர்வீடிலே இருப்பதாய், இதுவரை - ஏன்,
இன்றுவரை, நானும் அறியவில்லையே.

நாளை : ???????????????????????

::: கோ.இராம்குமார் :::

No comments: