Friday, June 8

வேடிக்கை!

இருட்டிலிருந்து வெடித்துவிளும்
வான பூ வேடிக்கை வெடிகள்,
உயர எழும்பி, வெடித்து சிதறி
சினுங்கியடங்கிய வாணம்,
சிறுவயது நினைவுகளை சின்னதாய்,
நினைவுபடுத்தி செல்கிறது,

வாகன நெரிசலுக்கிடையில், இரு
சக்கர வாகனத்தில் செல்கையில்,
வெடிசத்தம் கேட்டு வானை எட்டி
பார்த்திட்ட தருணம்.

 நான் நானாக இல்லை, ஐந்து
வயது பிள்ளையாய் ஆனேனோ?


::: கோ.இராம்குமார் :::

No comments: