Thursday, June 14

சே குவாரா -ஒரு மாமனிதன் (நிலா சூரியனின் கவிதை திருவிழா )

சே!
ஆச்சரியம்,
ஆனந்தம்,
வருத்தம்,
நாணயம்,
அட்சேபம்,
அங்கீகாரம்
இத்தனையும் அடங்குமோ இப்பெயரில்?
மானுட உணர்வுகளை வெளிப்படுத்தும் சொல்லோ அதுவும்??
புரட்சி போராளி, மருத்துவர், மார்க்சியவாதி, சோசலிசப் புரட்சியாளன்,
இப்படியும் அழைத்தனரோ உன்னையும்? அர்ஜென்டினாவில் பிறந்த,
கியுபா புரத்சியாளன் உன்னை போல், உலகில் எது தலைவனும்?

செல்வனாய் பிறந்தும், இனியனாய் வளர்ந்தும்,
இருட்டினில் கிடந்த நாட்டையெல்லாம் காக்க
போர்முனையில் குரங்காய் மறைந்துதாக்கும் - கலையை,
பயின்று, பலருக்கும் பழக்கினாய் - நீ
இறைவனோ பலருக்கு,
துணையருத்த கணவனோ,
உன் மனைவிக்கு ?
தத்தளிக்க வைத்த,
தகப்பனோ உன் பிள்ளைகளுக்கு ?

மருத்துவன் ஆகிபோகும் முன்னே,
அதனைதுறந்து -  வசதியின்,
இனிய வாழ்வதையும் கசந்து,
விடுதலை வீரனாய் - வெவ்வேறு,
நாட்டிற்காகவும் களமிரங்கினாய்,
போராளியாய் போராடியே - வாகை
சூடா மன்னனாய், அங்கும் நிற்காமல்,
அடுத்தனாட்டின் - அக்கரையில்
அங்கும் ஓர் போராட்டம், விடுதலை.

விடியல் கூட உன்னுருவில் - சூரியனாய்
விடிந்ததோ உன்னாலே, உன்னாலே!
உலகில்: கியுபா, காங்கோ,
பொலிவியா
இங்கெல்லாம், மக்கள் போராட்டமாய்
உன் முன்னிலையில், உன் முளுப்பயிற்சியில்,
கொரில்லா முறையில், கூட்டம் கூட்டமாய்,
மலையாய் குவித்து, குவியலாய் மாண்டனறோ,
உனது எதிரிகள்! உன் வீரத்திற்க்குமுன்.

நீ - போர்முனையில் மட்டுமா வீரன்?
ரக்பியிலும் சூரன், சதுரங்கத்தில் அரசன்,
படிப்பது உனக்கு பிடிக்கும் தானே,
எத்தனை ஆயிரம் நூல்கள் உன் சேகரிப்பில்?
அத்துணை நூல்கள் தந்த முதிர்ச்சியோ - உனது
பேச்சினில், எழுத்தினில், கவிதைகளில்.

உனக்கு இன்று பிறந்தநாள் தலைவா,
ஏழைகளின் திருநாள் அதுவா?
ஏற்றங்கள் கண்ட இறைவா - உன்னை,
போற்றிப்பாட எனக்கு, கிடைத்த தருணம் இதுவா?

இதுவரை, உன் முழுக்கதை தெரியாது எனக்கு,
இன்றே படித்தேன், உன் வரலாறு அனைத்தும்,
கவிதை திருவிழா நடப்பதால், இது நடந்தது,
நன்றிகள் நிலசூரியனுக்கும், எழுத்து.காமுக்கும்.

வாழ்க உன் புகழ், வானும் மண்ணும் உள்ளவரை.

No comments: