Tuesday, July 10

தாமரை இலை, தண்ணீர்!


தாமரை மலர் மேல்,
அமர்ந்திடும் வண்டுகளும்,
சுற்றி வரும் பெண்டுகளும்,
என் மேல் விழுந்து,
போகவா ஆசைப்பட்டேன்,
இழவு, என் நேரமோ - ஓர்
இரவு மட்டுமே,
வாழ்க்கை வாழ்ந்திடும்,
ஈசல் போன்றுத்தான்,
விடியல் வந்தபின்,
என் சிறகை இழக்க செய்து,
சிரித்து, கொசுருக்கேட்டு,
கொசுவம் சரிசெய்து,
கொண்டை முடிந்தபடி,
நெற்றி முத்தம் மிட்டு,
நேரம் ஆனதென்று - அவசரம்,
அவசரமாய் விடைப்பிரிந்தாளே,

தாமரை இலைமேல் தண்ணீராய்,
நானும் அவளும்!!


::: கோ.இராம்குமார் :::



Photo Courtesy: Negis Art!

No comments: