Thursday, June 7

ஆரவாரம்!


அடைமழை காணாது ஐந்தாறு மாதமாய்,
அடிமைப்பட்டு கிடந்தார்ப்போல் ஆயின,
புல்த்தரை முதற்கொண்டு புங்கைமரம்,
பூப்பூக்கும் சோலைவனம் எல்லாமே!

வாட்டி வதைத்த வக்கிர சூரியன் - லேசாய்,
வதங்கி, வந்தவழி தேட தொடங்கியதன்,
அறிக்குறியோ இன்று, இதமாய் காற்று,
மினுமினுத்த மேகம், இசையான இடியும்,
இன்முகம் காட்டியதை கண்கள் உணர,
நாசி உரசிய வாசனை, மண் வாசனை சேர,
வானவில் கண்ட கைபிள்ளையாய்,
ஆரவாரம்! காத்திருந்தது கடந்ததோ?
நீண்டநாள் கனவும் இன்று பளித்ததோ?

சென்னையில் லேசாய் மழைத்தூறல்!

::: கோ.இராம்குமார் :::

No comments: