Wednesday, June 6

அலைப்பேசி!


காசு: காற்றாய் பறக்கிறது
அலைவரிசை ஊடகத்தில்,
நொடிக்கு ஒரு பைசா என்றாலும்
நொடிந்து போகாமல் பேசி தீர்க்கும்,
தீர்க்கதரிசி யாரில்லை, பாரெங்கும்?.

பரதேசி முதற்கொண்டு அலைபேசி
புலங்கிட இன்று, புதுமை புரட்சி இதுவோ?
இல்லை: நிலபுலன் சேர்க்க நிறுவியவன்
செய்யும், வியாபார கவர்ச்சியோ, முருகா!

எல்லோர் கைகளது சிறையில்,
கைதியாய் அலைப்பேசி!

::: கோ.இராம்குமார் :::

No comments: