Wednesday, June 20

நெஞ்சோர நினைவுகள்!

 
நாலு அஞ்சு (04 .05) மணியாச்சி,
நான்த்தொலைந்து, நாலஞ்சு நாளாச்சு,
நசுங்கிப்போன எலுமிச்சை பழம்ப்போல்,
கழுவலில் வழுக்கி, தாவும் குளத்து மீன்ப்போல்,
குத்தகை எடுத்த, உன் மனசை,
குழந்தையாய் சிரித்த உன் சிரிப்பை,
எங்கு, தேடியும் கிட்டவில்லையே?

ஆரோமலே, என் நெஞ்சு ஆறாமலே
பதறி, சிதறிய தேங்காய் சில்லாய்,
அங்கொன்றும், இங்கொன்றுமாய் கிடக்குதடி,
அருகிலிருந்து நீயும் - என்னை
ஆட்கொள்ள வேண்டாம்,
இறுக அணைத்து - என்னை
உருக வைக்க வேண்டாம்,
தொலைவில் இருந்தாலும் - என்னுடன்
தொடர்பில் இருந்தாலே போதுமடி,
ஏழ்பிறப்பும் இன்பமே, இனிமையே,
உன்னுடன் -
பழகிய அந்த பதினைந்து நாட்களின்,
நினைவுகள்!

நெஞ்சின் ஓரமாய், நித்தியமாய்....


::: கோ.இராம்குமார் :::

No comments: