Wednesday, June 20

தனிமை!


இதயம், ஏனோ என் இதயம்,
இயங்க, நேரம் பிடிக்கிறதே...(2)

இதயம், ஏனோ என் இதயம்
இயங்க, நேரம் பிடிக்கிறதே,
லேசாய் துடிக்கிறதே - துணையில்லா
வேதனையில், துயர் பற்றிய துவானமாய்...

இதயம், ஏனோ என் இதயம்,
இயங்க, நேரம் பிடிக்கிறதே...(2)

தேடல், நின்றப்பாடில்லை
தேகம், மெலிய நூலிலைப்போல்,
நோக மனசும், இயங்க நேரம் பிடிக்கிறதே,..

இத்தனை நாள், இருந்துவிட்டேன்,
இதயம் சுருங்கி, விரியகண்டேன்,
இம்சையாய், தனிமை உணர திரிந்தேன்,
இருட்டினில்,
தலையணை உறவில் புலம்பி துயின்றேன்,
புதுமை காலையில் ஓலை வருமோ?
புரியாமல், சேதி அறியாமல், சோர்ந்தேனே?

இதயம், ஏனோ என் இதயம்,
இயங்க, நேரம் பிடிக்கிறது...(2)

தேடல், நின்றப்பாடில்லை
தேகம், மெலிய நூலிலைப்போல்,
நோக மனசும், இயங்க நேரம் பிடிக்கிறதே,..

இதனை நாள், இருந்துவிட்டேன்,
இனியும் ஒரு நொடி இருக்க முடியாது,
தேதி கிழிந்த நாட்காட்டியும் தேயுதடி,
எனக்கென பிறந்தவள், தேவதையும் யாரடி?
எங்கிருக்கிறாய், என்னை தெரியவில்லையா?
ஏதும் தெரியாமல், ஏக்கம் நெஞ்சை கொல்லுதே!

இதயம், ஏனோ என் இதயம்,
இயங்க, நேரம் பிடிக்கிறதே...(2)

இதயம், ஏனோ என் இதயம்
இயங்க, நேரம் பிடிக்கிறதே,
லேசாய் துடிக்கிறதே - துணையில்லா
வேதனையில், துயர் பற்றிய துவானமாய்...

இதயம், ஏனோ என் இதயம்,
இயங்க, நேரம் பிடிக்கிறதே...

::: கோ. இராம்குமார் :::

No comments: