Wednesday, April 4

சிரிப்பு !


மருதாணி இலையோடு,
புளி சேர்த்து அரைத்து எடுக்க,
கிடைக்கும் கலவை, மருதாணி கூழை,
தாள்ம்மடித்து கூழ் தினித்து,
அன்னம் வண்ணமாம், அவள் உள்ளங்கை -
யதனில் வளைத்து, நெளித்து,
வரைய தெரியும், பச்சை வண்ண ஓவியமும்,
நிமிட நாழிகை கடந்து, காய்ந்து, உதிர,
சிவந்து சிரிக்குமவள் உள்ளங்கை யதுவும்,
விரல் நுனி யதுவும், அழகோ, பேரழகோ ?

மருதாணி ஓவிய பூக்கள் கூட,
சிவக்க சில மணிந்நேரம் கேட்க்குமே,
என்ன ஒரு மின்னல் வேகம்,
நீ சிரிக்க சிவக்கும் உன் வெட்கக்கன்னங்கள் ?

:::: கோ.இராம்குமார் கோபால் :::::







No comments: