Monday, April 9

சிரிப் பூ !


பூக்காரி அலமேலு
பூவாதான் சிரிச்சாலே,
பூவாசம் அவ மேல,
வாய்பேசா வச்சாலே,
சாமந்திபூ அழகாய்,
ஒத்தையாய் இருந்தாலே,
சமயம் வரக்காத்திருந்து,
கனவோடு நின்றேனே,
சும்மாவே பாத்தாலே,
துரு துருக்கும் கண்ணாலே,
துருப்பிடித்த இரும்பாக,
உதிர்வேனே நானுமே.

உதிர்ந்து மணக்கும் பூ எல்லாம்,
அவள் சிரிப் பூ தானே! வேறென்ன ?

:::: கோ.இராம்குமார் ::::




No comments: