Monday, April 16

வெளிச்சம்!



பழகிய முகம்தானதுவும்,
அவளுடன் பழகியதில்லை.
பார்த்திட்ட பொழுதுகள் பல,
ஒருநாளும் பேசியதில்லை.
என்னைக்கடந்து போயிருப்பாள் பலநாள்,
தோணவில்லை இதுநாள் வரையில்.

அவள் அழகான பெண்ணாயிருந்தும்,
எப்படி தவிர்த்தேன், அவளை?
அவள் இயற்கையாய் தெரிந்தும்,
ஏனோ, எட்டவில்லை இந்த புத்திக்கு?
மா நிறம் குறைந்த நிறமாயினும்,
மனதிற்குள் புதைந்திடும் முகமதுவோ?
இருக்க வேண்டிய அத்துணை அம்சமும்,
இவளுக்கே தனி சிறப்போ?

இன்று என்ன அது ஒரு, வெளிச்சம்?
இத்தனை நாளாய் இல்லாதொரு, புதுமை?
என்னிடம் நானே, கேட்டிடும் கேள்வி?
இனியாவது அவளிடம், பேசுவேனோ?
சொல்லாத என்க்காதல், சொல்வேனோ?
கேட்டகாமல் சென்றாலோ, என்செய்வேன்?
சொல்லாமல் விட்டாலும், கொல்லுமே?
அவளுக்கு, என்னையும் பிடிக்குமோ?
எப்படி, எம்மொழி சொல்லுவேன்?
எதுகை, மோனை வேண்டுமோ?

கருவிழி, மைதிலி போறாளே,
போறாளே என்னைக்கடந்து போறாளே,
சொல்லவா மெதுவாக சொல்லவா?
கேட்குமோ, உரக்க மீண்டும் சொல்லாவா?
இனிமேலும், முடியாது மைதிலியே,
ஒருநிமிடம் நிற்ப்பாயோ கண்மணியே,
உன்னிடம் ஒன்று சொல்கிறேன்,
உவமை இன்றி மொழிகிறேன்.
காதல் உன்மேல் காதல்,
காலம் கடந்து சொல்கிறேன்,
உனதுகரம் பிடித்து நடந்திட வேண்டும்,
உன்மடி சாய்ந்து உறங்கிட வேண்டும்,
உன் விழி பார்த்து பேசிடவேண்டும்,
உன்னுடன் சேர்ந்து வாழ்ந்திட வேண்டும்,
தருவாயோ, இவ்வரம் அனைத்தும்?
I LOVE YOU மைதிலியே ........

DON `T SAY NO , TO ME ,
MY HEART AND SOUL yoU ONLY ....

-------------------------------------
::: கோ.இராம்குமார் :::
------------------------------------


No comments: