Monday, April 2

பரிதவிப்பு!


சாயும்காலம் நிழலும்,
சரிந்து, விழுந்து மடிய - மூழ்கும்,
இருளில் மிளிரும், நிலவாய்!
உன்முகம் கண்டு சிலிர்த்தேனே !

மாயம் என்ன மாயம்,
மயங்கிவிட்டேன் நானும்,
சாலை விளக்காய், ஒளியாய்,
பளிச்சிட சிரிக்க, விழுந்தேனே!

தேனுன்யிதலும்  என் னாவும்,
தேவை தீர்ந்தும் நிற்க - மறுக்க,
தேனீக்கள் நீந்தும், தேன்க்குளமோ?
உன்னிதழ் இரண்டும், மிரண்டேனே!

பருவம் இளம்பருவம், உன்னுருவம்,
மோசம் செய்யா திருக்க - நெஞ்சிறுக்க,
இமைகள் ஒட்டா - கண்விழித்தேன்,
உன் கடைக்கண், விடைக்கேட்க,
சிவன், ராத்திரி பக்தன்  நானோ !

அய்யையோ, ஆர்பரிப்பு, பரிதவிப்பு...
அடிமையாக, என்ன வரிவிதிப்பு ?
சொல்ல, செலுத்தா ஆவேனே,
அடிமையாய் உனக்கு, அடிப்பணிய !!

:::: கோ.இராம்குமார் :::: 

No comments: