Sunday, April 15

காதல் கதை !




ஒளிப்போல், ஒலியைப்போல்,
வேகமாய் போகிறாயே - வெண்ணிலவே!
நின்றிடு ஒருநிமிடம் - என்
காதல் கதை கேட்டிடவே?

என் காதல் புதைந்த, அவள் கண்ணில்,
பூவலயம் கருவிழியால், காணும் வழி,
தெரியா நின்றேன், காட்டுவழி - தவறியவன்,
தவிப்பதுப்போல் தவித்தே?

கண்டும் காணாமல் போவதுமேனோ?
சொல்ல மொழியுண்டு, சொல்லிட பொழுதில்லை,
எண்ணி எண்ணி, ஏழையும் ஆவேனோ,
எழுதும் அறிவிழந்து, சிந்தனை திறன் குறைந்தே?

பேசிவிட துடித்த நொடிகள் எல்லாம்,
பேதையாய் இருந்தவிட்டு, இன்று - பேசிட,
வருநொடியில், சொல்லிட முடியா தயக்கம்,
மயக்கம் எனக்கு, மயக்கியவள் அவள் தானே?

முடிந்துப்போன மூச்சுக்காற்றாய், முடிவுரை
படித்தேன் காதலில் சொதப்பியே, சொல்லாது,
முழுதாய் நின்ற தென்றல் காற்றாய்,
புழுக்கம் சூழ்ந்த நெஞ்சில் வியர்வையாய்,
வழிதெரியா உருள்கிறேன், அவள்நினைவில்.

வேரிலிருந்து துளிர்த்து, வாழையாய்,
வாழையடி, வாழையாய் என்றுமே - என்,
நெஞ்சுக்குள்! வாழ்க்கையை வாழ்கிறேன்,
அவள் நினைவு அது ஒன்றே! இன்பமே என்று!!

சொல்லாத காதல், என் காதல் - கதை
கேட்டாயோ வெண்ணிலவே!
சென்று வா, நாளையும் தொடர்கிறேன் ........

-------------------------------------
::: கோ.இராம்குமார் ::::
-------------------------------------

No comments: