Monday, April 23

உமையாள் உனக்கு பிறந்தநாளோ?


சித்திரை திங்களில் உமையாள் உனக்கு,
பதினொன்றாம் நாளில் பிறந்தநாளோ?
ஆசிகள் பல சேரும், பொன்னாளிதுவும்,
ஆண்டாண்டு காலங்கள் தொடர்ந்திட வேண்டும்,
அரியணை ஏறிட்ட அரசியைப்போலவும்,
அமைதியை தந்திடும் நிலவொளிப்போலவும்,
நறுமணம் கமழும் செண்பகம் போலவும்,
அன்பினை சுமந்து, அமைதியை தந்து,
மலர்முக  சிரிப்பினில், மதிஒளி குளுமையில்,
கொண்டவர்க்கெல்லாம் சந்தோசம் தந்திடுவாய்,
என் அன்பு தமக்கையே ! தோழியே ! நீ நீடூழி வாழ்கவே !!

::: கோ.இராம்குமார் :::

No comments: