Friday, April 20

மரிக்கொழுந்து வாசம்!


சுவாசம் அத்து போச்சுதுன்னா,
வேஷம் கலைந்து போகுமுன்னு,
ரோசம் கேட்ட பய,
பேசும் வார்த்தைய நம்பி,
பாசம் விலை பேசி முடிச்ச,
காசும், என் கருமாதில,
வீசும் ஊதுபத்தி பொகையா,
தூசும் தும்பியுமா சேந்து,
தோஷம் கழிச்சிட்டு போய்டும்ன்னு,
தேச(ம்) துரோகம் பண்ணமுடியுமா?


மதுரை மரிக்கொழுந்து,
மாசம் நாலு ஆனாக்கூட,
வாசம் விட்டு போகாதான்.

அது மாதிரிதான் நானும்!


::: கோ.இராம்குமார் :::

No comments: