Thursday, April 26

மல்லிகை மொட்டு!




மொட்டு விட்ட மல்லிகை கொடியும்
பூப்பெய்திவிட்ட சேதி கேட்டு - தேடி
பறந்தோடி வந்திடும் தேனீ - தேனைப்பருகவோ?

தேவதையாய் தெரிந்திட்ட மல்லிகை மொட்டை,
வடாமல்லியை, வாடிட செய்திடா தேனீயையும்
காணயிலே, கால்நகம் தரையை கிறுக்க
கோலங்கள் போட்டிடுமோ பூங்கொடியும் ?

புரிந்துக்கொண்ட மொட்டும், மலரும் தருணம்
சுற்றி கலைத்த தேன் ஈயை பற்றும் காமம்,
புடைத்த நரம்பினை அழுத்த குறையுமோ,
சலிக்க குடித்த தேன், காமன் குறைந்த ஈ,
வெட்க்க கண்கள் பேசிடும் பேச்சில்,
அடுத்த சுற்றுக்காய் இறக்கை விரிதிடுமோ?
அலுப்பை விரும்பாத ஆண் தேனீ,
அதையே விரும்பும், மல்லிகையும்!

சுவையில் நா சுவையில்,
மலரும் விரிந்திடும் நொடியில்
நுழைந்திடும் வண்டும் இறுக சிக்கி
ராட்டின கயிறாய் அகம்புற நகற
வழுக்கியே குலுங்கியே சிந்திடும் - மகர
இந்தம், முற்றும் இன்பம் முற்றும்.
முடிந்ததும் பறந்தது தேனீயும்,
மூலையில் அழுதது மல்லிகையோ?

முதிர்ச்சி இல்லா புணர்ச்சியில்,
அதிர்ச்சியில், பிறந்தது அடுத்தவாரிசு,
அழகாய், வளைந்தே, புதுக்கொடியாய்!!

::: கோ.இராம்குமார் :::




No comments: