Friday, April 20

இனிமை!




இனிப்பை தவிர்க்கும்,
எறும்புகளும் இருந்திட்டால்,
இனிப்பை, இனிப்பே வெறுக்குமோ?

இனிமை யில்லா,
இயற்கையும் இருந்திட்டால்
இயற்க்கை,  செயற்கையாய் சிரிக்குமோ?

இனிப்பை வெறுத்த,
தேனீக்களும் இருந்திதிட்டால்,
தவார, செடிக்கொடிகள் எக்கணம் பூக்குமோ?

இனிப்பை சுரக்கா,
இதழ்களும் இருந்திட்டால்,
கலவியின் முகவரி, முடிவுரை ஆகுமோ?

இனிப்பை தொலைத்த,
வாழ்க்கையும் இருந்திட்டால்,
இல்லறம் நல்லறம் புரியுமோ?

உப்பில்லா உணவும் குப்பையிலே, என்பர் -
இனிப்பில்லா வாழ்வும் நிலைதிடுமோ?

இனிது, இனிது இல்லறம் இனிது,
இன்முகம் கொண்டவளும்,
இயல்பாய் சிரிப்பாள், இனிமை தொடுப்பாள்,
இனிக்க இனிக்க, இதழ்முத்தம் கொடுப்பாள்,
இழுத்தணைத்து, உடல்முழுதும் கொடுப்பாள்,
இறுதி எனக்கருதி, இருக்கியணைத்து கொடுப்பாள்,
இதுப்போதும் இன்றைக்கென்று, நழுவிட துடிப்பாள்,
இனிமை இதுவோ! போதும், போதுமென்பாள்,
இருகிட்ட அவளும், பகலிது என்னைவிடு, என்பாள்,
இரவொன்று வரும்வரை,
இனிமை தொடர வழியில்லை என்பாள்,
இருட்ட பொழுது இருக்கு இன்னும்,
இறுக்கி பிடித்து படுத்துக்கோ என்பாள்...
சக்கரை கலந்த தேனைப்போல,
நீரில் பிரிந்தேன் தனியாய் நானே,
இருட்டை வேண்டி, இனிப்பை சுவைக்க,
பற்கள் கடித்தே, கடிகாரம் பார்க்கிறேன்.

விடிந்தது பகலும், இனித்தது கனவோ ?

இனிமை, இளமை, தனிமை, கொடுமையோ??

::: கோ.இராம்குமார் :::
















No comments: