Wednesday, April 11

எச்சரிக்கை ?



முழங்கி மறைந்த இடியை போலே,
குலுங்கி மறைந்த பூமித்தாயே,
என்ன வேண்டும் உனக்கு?
எதற்கு இந்த எச்சரிக்கை?
ஏது தவறு இழைத்தோம் நாங்கள்?

மரண பயத்தை கண்ணில் காட்டி,
மனித குலத்தை மிரள செய்கிறாய்,
மண்டியிட்டு, மல்லாட வேண்டுகிறோம்,
இன்னொரு சுனாமி வேண்டாம் தாயே,
தாங்காது, எங்கள் உயிர்கள், போதும் -
போதும், என்கிற அளவுக்கு அள்ளி சென்றாயே,
இன்னுமா, உனக்கு அடங்காப் பசி ?

உயிரை தொலைத்து, உறவுகளை தொலைத்து,
தேடி தேடி, தேடி கிடைக்கா, இறுதிச் -
சடங்குகள் கூட, நடத்தி விட்டோம்.
நடுங்கி, ஒடுங்கி நடுத்தெருவில் உறங்கி,
நாய்களாய் அளந்தோம், நாதியற்று அன்று.

மீண்டு வந்து, பன்னிரண்டு -
வருடம் முடியா முன்பே,
மீண்டும் வந்து மிரட்டுவதும் ஏனோ?
தெம்பில்லை இனியும் ஓட,
துணிவுமில்லை துன்பத்தை நோக்க,
மன்னித்துவிடு பூமித்தாயே,
ஏதேனும் தவறு இழைத்திருந்தால்.


::: கோ.இராம்குமார் :::



No comments: