Monday, April 23

சோம்பல்!


 சர சர வென சாரை சாரையாய்,
ஊர்ந்து, வளைந்து வரிசையாய்,
எங்கே, அவசர அவசரமாய் போகிறீர்கள்,
கொட்டும் மழை, கொண்டு போய்விடும்,
ஓடும் நீரினில் நனைந்து மிதந்திடும்,
உற்பத்தி, இனவிருத்தி இடைவிடாது,
இடப்பெயர்வு, பொருள் கடத்தல்,
உணவெடுத்தல், உழைப்பை கற்றுகொடுக்கும்,
உங்களுக்கு ஆறு மாதம் ஓய்வு, தேனிலவு!

சபாஷ், உங்களை உதாரணம் காட்டினர்
உழைப்புக்கும், திட்டமிடழுக்கும்,
உங்களைப்போல் நானில்லையே?
உறுத்துகிற நெஞ்சம் கொஞ்சம்,
மறுத்து பேசும் சோம்பல் உடலும்,
திருந்துகின்ற தருணம் இதுவாய்,
ஏனிருக்க கூடாது  இக்கணமே, இன்றே ??

::: கோ.இராம்குமார் :::

No comments: