Thursday, April 26

அன்று !



இடுக்கி பிடிப்போல் இறுக்கி பிடித்தாலும்,
விலகி ஓடிட துடிக்குதவள், மனசு - காதல்
கட்டைவண்டி சக்கரமோ அச்சாணி,
இறுக்கம் போல் அவிழாமல் போக?

வழியெல்லாம் ஒரு வழி பாதையாய்,
திரும்பிட வழியின்றி சுற்றிடும் வாழ்க்கையில்,
விதிவிட்ட வழியோட, விழியோரம் நீர்வடிய,
விளக்கு திரியாய், மெழுகாய் கருகி,
என்னை விட்டே எரிய தொடங்குகிறேன்,
எண்ணையில்லாமல், விளங்கா விளக்கில்,
விளக் எண்ணை ஆனேன் நானும்.

வியப்பு! நானும் காதலனாய், அன்று.

::: கோ.இராம்குமார் :::



No comments: