Saturday, October 13

சொல்லடி என் தாயே கருமாரி!


எண்த்திசையும் எட்டும்ப்படி,
சொல்லிச்சொல்லி கொட்டிடு
முரசை, கேட்க்கும் சத்தம்
விண்ணைப்பிளக்கும் வரை,
எதிர்வரும் காற்றில் எதிர் -
ஒலி ஒலிக்கும் வரை,
ஓயாமல் ஒரு நாளும்,
முரசின் ஒலியாய், என்
எழுத்துக்கள் எல்லாம்,

எதிரொலிக்கச் செய்வாயோ
என் தாயே கருமாரி,

சிறியதாய் இருந்தாலும்,
காரத்தில் குறையாத கடுகாய்,
நானும், எழுதும் எழுத்துக்கள்
எல்லாம், ஏனோ கசக்கிறது
படிப்போர்க்கும்,
பார்வையிடுவோர்க்கும்,
லேசாய் சிரித்துவிட்டு
போவோர்க்கும்,
பார்த்தும் பார்காதுப்போல்
இருப்போர்க்கும் - என்னை
வெறுக்கும் ஒருசிலர்
எல்லோர்க்கும்,

தமிழ் படிப்பது அத்தனை
அசிங்கமோ, இல்லை என்
எழுத்துக்கள் அத்துனை
அசிங்கமோ, சொல்லடி என்
தாயே கருமாரி.


எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: