Saturday, October 13

சமாளிப்புகள்!


சாதக பொருத்தம்,
சாத்திரங்கள் எல்லாம்,
சான்றோர் வழித்தொடரும்
சமாளிப்புகள் தானோ,
இல்லை, காதலை
தட்டிகழிக்க சொல்லும்,
சாக்குகள் தானோ,

கண்ணில் நுழைந்து

கவிதையாய்ப் பேசி
கனவுக்குள் நுழையும்
காதலும் பாவமோ,
காதலர் சாபமோ,

வாழ்ந்திட ஏங்கும்,
இளசுகள் மனசும்,
வாழையாய் வீழுமோ,
வார்த்தையால் மூழ்குமோ,
வலிகளில் வாடுமோ,

பக்குவம் பேசியக்
கிழவர்கள் எங்கே,
புத்தகம் எழுதிய
புலவர்கள் எங்கே,
கவிதையில் கதைத்த
கவிஞர்கள் எங்கே,

உங்கள் பேச்சுக்கள்,
எழுத்துக்கள் இன்று
காலாவதியும் ஆனதோ,
காற்றினில் பறந்தே
கடலக் கடந்துப்
போனதோ,

எங்களை, காதலை
வாழவும் வைக்கவே,
வைக்கம் வீரர்ப்போல்
வருவாரோ எவரும்?
வந்தே, நின்றே,
சாத்திர, சாதக
சடங்குகளை வென்றே,
ஒழிப்பாறோ ??



எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: