Wednesday, October 17

சென்னையில் மழை!



கொட்டும் மழையின்
ஊடே குளிர்க்காற்று,


குடை எடுக்க மறந்து,
இரண்டாம் முறை
குளித்தேன்,
உடையணிந்தே,
எனை மறந்து,

வானைக் கண்டு,
கைகள் ஏந்தி,
எகுறிக் குதித்தே,
எத்தி நடந்தேன்,

ஓடையாய் மாறிய
சாலையில், ஓடி
தப்பிக்க முனைந்த,
மீன் குஞ்சியை
விரட்டியே,
வீடடைந்தேன்,

மழை,
மனதை திருடி,
உலகை மறக்க
செய்திட,
காகித படகைப்
போலே, அதில்
மிதந்தேன்  நானே,

அந்தநாள் நியாபகங்கள்,
நினைவுக்கூர்ந்த மழைக்கு,
நன்றி!


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

No comments: