Saturday, October 13

புகையில்லா பூமி!



சாரல் பொழியும்
வானமாய் - நானும்,
வெளுத்து, இருண்டு
மீண்டும் உருண்டு
ஓடுகிறேன், நில்லாமல்,
சொல்லாமல் நீளமாய்,
நீலமாய் நிலத்தில்
இருக்கும் எல்லோர்க்கும்
மேலே மேகமாய்,


அண்ணாந்து பார்க்க
வைக்கும் உயரத்தில்,
உலகத்தில் இருக்கும் எல்லா
உயிர்க்கும் இறைவனாய்,
சூரியனாய், சந்திரனாய்,
மற்றும் உள்ள
ஏனைய கடவுள்கள்
உலவும் உலகமாய்,
கீழிருக்கும் உயிர்கள்
பிரிந்தப்பின் அடையும்,
சொர்க்கமாய், நரகமாய்
எத்தனை, எத்தனை
ஆத்மாக்கள், மகாத்மாக்கள்
ஆவிகள், நீராவிகள்
என்னில் அடைக்கலமாய்,

அந்த நாள் முதல்,
சிறிது நாள் வரை
நானும் மாறவில்லை,
ஆனால் ஏனோ
சில காலமாய்,
கலங்கி நிற்கிறேன்,
கண் எரிச்சல் என்னை
கொள்கிறது,
சுற்றுச்சூழல் மாசு,
என்னை துளைக்கிறது, (ஓசோன்,ஓட்டை)
துவண்டிருக்கும் எனக்கும்,
தூய்மையை கொடுப்பீறோ?
புகைப்பதை
கொஞ்சம் குறைப்பீறோ??

புகையில்லா பூமியை
கண்டிடவே எனது நெஞ்சம்
துடிக்கிறதே.



எழுத்தோலை கோ.இராம்குமார்.




*(புகையில்லா பூமியை
கண்டிட உங்கள் நெஞ்சமும்
துடித்தால், உண்மையிலேயே
உங்களுக்கும் அக்கறை இருந்தால்,
தயவுக்கூர்ந்து உங்கள் சுற்றுச்சூழலை -
யேனும் தூய்மையாய் வைப்பீரோ,
இச்செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் சொல்வீறோ??????????????????????????????)


(Please Share)

No comments: