Saturday, October 13

யார் எனக்கு?


கோதை விழி கூருடை -
யாள், கொஞ்சலாய் கூப் -
பிடுவாள், சங்கத் தமிழ்
பேசிடுவாள், சங்கதிகள்
தொடங்கிடவே சங்கோத

மொழியில் உரையாடிடுவாள்,
பிள்ளைகள் உறங்கிட
தாலாட்டு பாடிடுவாள்,
தவித்திடும் இணையைக்
கண்டு கண்ஜாடையில்
பாய் விரித்திடுவாள்,
ஊடலால் மோதிடும்,
போதெல்லாம் காதலால்
கட்டு புரண்டிடுவாள்,
கண்ணடிப்பாள்,
கதைப்பேசுவாள்,
கிள்ளி ஓடி, ஒளிந்துக்
கொண்டு பயந்தவாறு
படபடப்பாள்,

என்றெல்லாம்,

கதையில் படித்ததுண்டு,
கவிதையாய் கேட்டது உண்டு,
காட்சியாகவும் பார்த்ததுண்டு,
நிஜத்தினில் நிகழ்ந்திடவே,
அவளென்று யார் எனக்கு?



எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: