Saturday, October 13

கண்ணீர்!


கண்ணீரை துடைக்கும்
கைக்குட்டை, ஈரமாவதும்
பின்பு உலர்ந்து, மீண்டும்
ஈரமாவதும் .........,

இயற்கையாய், கண்களில்
அழுகையால், விழிசுனைப்
போல் சோக, துக்க, பாச
உணர்ச்சிகள், வெளிச்சம்
தேடிடும் வண்ணத்துப்

பூச்சியாய் பல நிறங்களில்,
சில, பல நேரங்களில் - எதிர்
பார்த்தும், பார்க்காமலும்,
நிகழ்வதால் தானோ?

கண்களில் கண்ணீருடன் நானும்,
காரணம் தெரியாமல் கண்ணீரும்,
சில காலமாய், நண்பர்களாய்,
இணைப்பிரியாமல்...

 
 
எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: