Wednesday, October 17

வறுமை ஒழிப்பு தினமாம் இன்று!


பிணைந்து தின்ன
சோறின்றி,
குப்பையில் ஈ
மொய்க்கும்,
இலையை நக்கி,
போக்கிய பசி ,

வறுமையின் சிகரமாய்
நம் நாட்டில்,
அன்றுப்போல் இன்றும்,
என்றுமோ?

வறுமை ஒழிப்பு
தினமாம் இன்று!

வற்றாத ஆற்றை
கண்டவர் யாரோ,
ஒழியாத வறுமையை
கொண்டாடுபர் யவறோ?


எழுத்தோலை, கோ.இராம்குமார்.

1 comment:

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிதை நன்று. கொடிது கொடிது இளமையில் வறுமை.