Saturday, October 13

நீயொறுக் கதை சொல்லு, நண்பா!


கனவும், கதையும்,
கற்பனையின் தாண்டவமோ,
காதலும், பெண்களும்,
கவிதைக்கு பொருத்தமோ,
நண்பா, நீயொரு கதை சொல்லு,
தாண்டவமில்லா கற்பனையில்,
பொருத்தமில்லா கவிதையாய்,

தூங்கும் வரைக் கேட்கிறேன்,

தூங்கியப்பின்பும் தொடரும்
கனவினில், முடிந்தால் அதன்
தொடர்ச்சியை நிறங்கள் துறந்தத்
திரையில், காணொளியை காண்கிறேன்,

நண்பா, நீயொறுக் கதை சொல்லு.


எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: