Saturday, October 13

அநீஸ்வராய நம!


தொந்தி கணபதியை
முந்தி வேண்டிட - பிந்தி
போகுமோ தீரா
வினைகளும் தீர்ந்தே,

தும்பிக்கையை மூன்றாம்
கையாய், யானை முகம்க்
கொண்டே நம்பிக்கையை
நல்கும் நாயகா உன்னடி
தொழுதோம் விநாயகா
என்றே நாளும்,

கரணம் தப்பிய மரணமாய்,
நிதமும் இருக்கும்,
எங்கள் வாழ்வும், உன்னை
தொழுவதால், தோப்புக்
கரணம் உன் காலில்
விழுவதால், பெற்றோம்
சுகம் கொண்ட வாழ்வும்,
எல்லா வளமும் பெற்றே,

"அநீஸ்வராய நம"
என்றே நாளும் உனக்கு
அர்ச்சனை செய்தோம்
பெரியவன் உன்னை மிஞ்சிய
இறைவன் எவரும் இல்லை
என்றே,

நாளும் நாளும்
எங்கள் குறை தீர்த்தாய்
அரசமர நிழற் அமர்ந்தாய்,
விநாயகா, வேலனுக்கு
மூத்த சோதரா, நவ கிரக
நாயகா, அருகம் புல்
மாலைகள் பூண்ட
ஆணை முகத்தா, அகம்,
புறம் எல்லாம் நிறைத்து
நீயே கதி என்றோம்,

எல்லா வளமும்,
எல்லா நலமும்,
வேண்டி நிற்கிறோம்,
உன் திருவடி அருகில்
சுக்ல சதூர்த்தி தினத்தில்
சங்கடங்கள் தீர்த்து,
இனியும் சேரா திருந்
திடவே மனமுருகி
பாடினோம்,

"பாலும் தெளிதேணும் பாகும் பருப்பும்
இவை நாண்கும் கலந்து உணக்கு
நாண் தருவேன் கோலஞ்செய் துங்கக்கரி
முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா"

எம்பெருமானே, எல்லா வல்ல இறைவனே!


எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: