Saturday, October 13

நிஜம் மறந்த பொய்!

வாட்டிய வெயிலில்
குடைப்பிடித்த கைகள்,
கொட்டிய மழையில்
தலைத்துடைத்த நொடிகள்,
வதைக்கின்ற குளிரில்

கதகதப்புத்தந்த இதழ்கள்,
ஏனோ,
இன்றில்லை என்னோடு,
நானோ,
நூலறுந்த பட்டமாய்
திசையறியா காற்றோடு,
நீயோ,
நிழற்மறந்த வெயிலாய்,
நிலவை மறந்த இரவாய்,
நிஜம் மறந்த பொய்யாய்,
என்னை மறந்தே எங்கே
சென்றாயோ?



எழுத்தோலை கோ.இராம்குமார்.

No comments: