Saturday, October 13

முடிவு!


எஞ்சி இருக்கும் கஞ்சி வேண்டி
காலையில் வாசலில்,
கெஞ்சிக் கூவி நின்றாள் வஞ்சி
கிழிந்துப்போன பாவாடை, சட்டை
நலிந்துப்போன உருவமும், உடலும்,

தொய்ந்துப்போன குரலும், வாழ்வும்,
ஒருங்கே சேர்ந்த உருவமும், உயரமும்
அழகாய் ஓடியாடி திரியும் பருவமும்,
அதுவும்,
படிக்கும் வயதில் பாத்திரம் ஏந்தி,
அம்மா, தாயே பசிக்குது என்றாள்,
பாவம் பார்த்திட தானே முடியும்,
எத்தனை பேரால் அதுவும் கூட,
படிக்க துடிக்கும் அவளின் மனதை,
படித்து எடுத்தேன் அந்த முடிவை,

பள்ளியில் அவளும் ,
மகிழ்ச்சியில் நானும்.
 
 
எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: