Saturday, October 13

முடிவுகள் இல்லா தொடக்கங்கள்!


கனவுகள் தொடர்ந்திடும்,
இரவுகள் எல்லாம்,
கவிதைகள் எழுதிட
வரிகளை கொடுக்குமோ,
கனவுகள், கவிதைகள்

தெரிந்திட, எழுதிட
நினைவுகள், தவணையில்,
சொற்களாய் பிறக்குமோ,
மோனைகள், எதுகைகள்
மோகனமாய் கோர்த்திட
நிகழ்வது கனவோ இல்லை
நிஜமோ, அதுவும் இல்லையே,

கனவு, கவிதை இரண்டுமே
முடிவுகள் இல்லா தொடக்கங்களோ!



எழுத்தோலை கோ.இராம்குமார்

No comments: