Sunday, December 9

வளவனும் பாரியாய்!


Dec`08

கிள்ளி வளவன் துல்லிசை
கேட்டிடவே, வள்ளி வடிவாய்

வர சொல்லிய செல்வியும்,
துள்ளி, துள்ளி நடந்துவர,
மயிலோ, மயில் வடிவோ
என்பதுப்போல் - ஒன்பது
அங்கமும் தங்கமாய் ஒளிர,
குளிர்க் காற்று வீச செய்யும்,
பார்வையும் கோர்வையாய்,
கொடியிடையில் மணி -
மேகலையும், அதன் மேல்
வட்ட கொப்பூழ் மறையா,
தெரிய விட்டு, தெறிக்க விட்டு
விடுவாயோ,

என் கண்களின் கருவிழி
குருடாக கூடாதே, கொன்றவை
மகளே என் மன மாளிகை
இளவரசியே, வேண்டாம்
நீயும் பாட்டிசைக்க வர
வேண்டாம் அவையில்
அரசனுக்கெதிரே, இரண்டாம்,
முறையாய் உனைக்கொள்ள,
நாட்டையே தந்தாலும் தந்து
விடுவார், வளவனும்
பாரியாய் ஆனாலும்
ஐயமில்லை.


எழுத்தோலை!

No comments: