Tuesday, December 18

மாயம்(ன்) என்ன நான் செய்வேன்?


Dec`16

சுவர்க்கம், நரகம் இரண்டும்,
சுமக்கும் கண்கள் உனதும்,
ஒன்றோடு ஒன்று அருகில்,
உன்னையும் என்னையும்
போல - ஒட்டாமல் ஒட்டியே,

ஓய்வில்லாமல் சிமிட்டியே,
உயிர்ப் பிறந்து, பிரிகிறதே,
தினமும் என்னை நீ -
கடந்து போகையிலே,

சொர்கமோ, நரகமோ
இரண்டுமே வேண்டும் - உலகம்
அழியும் முன் என்னை
அழிப்பாயா இல்லை - என்,
நெஞ்சத்தை அள்ளிப்பாயா?
ஐந்து நாட்களே இருக்கிறதே,
இருபத்தியொன்றில் உலகம்,
இருந்தத் தடம் தெரியாமல் போக,

மாயம்(ன்) என்ன நான் செய்வேன்
உன்னை, மயக்கி தூக்கி செல்ல.


எழுத்தோலை!

No comments: