Sunday, December 9

களையெடுத்தல்!


Dec`07

பத்தோடு பதினொன்றாய் நீயும்
பக்கத்தை நிரப்பும் பாமரனாய்

என் வட்டத்தில் இருப்பதும் எதற்கு?
சாக்கடை அடைப்பைப் போல,
தேநீர்க்கடை ஈக்களை போல,
நடு முற்றத்தை நிரப்பியப்படி வீணாய்,

உன் நட்பினில் ஒரு நாளும்
நனைந்ததும் இல்லை,
நான் தீட்டும் கவிதைகள் உன்னை
சீண்டவும் இல்லை,
இப்படியே இருந்திட எனக்கு
தேவையோ ஆயிரம் கணக்கு?

அறுவடைக் காலம் நெருங்க - களை -
யெடுக்கும் பணியும் தொடங்குமோ?

தொடங்கியது என் முகப்புத்தகத்தில்.



எழுத்தோலை!

No comments: