Sunday, December 9

காணாமலே போயிற்றே!.


Dec`04

அவள் கண்களில் குளிர்க்கண்ணாடி,
ஜில்லென்ற தென்றல் என்மேல்,
கம்பளி இதம் தேவையை
பதம் பார்க்க ஏங்கும் அவளிதழ்,

கொஞ்சம் அதிகமாய் அடுப்பினில்
கிடந்திருக்குமோ?
பக்கத்தில் வரும் முன்னே,
அனலாய் தேகம் கொதிக்கிறதே,

நெருங்கிட அவள்க் கைப்பற்றிட,
பரவியக் காட்டு தீ, கண்கள் தொடங்கி
காடு, மலைப்போல் தேக வளைவு,
சுளிவு, நெளிவுகள் எங்கும் மிச்சமின்றி,

கொழுந்துவிட்டு எரியுமோ,
என் குளிரையும் போக்குமா?

குளிருக்கே வேர்த்திருக்கும் போல,
சொல்லாமல், கொள்ளாமல்,

காணாமலே போயிற்றே!.
 
 
எழுத்தோலை!

No comments: